சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காததாக திமுக வினா் மீது வழக்கு

கமுதியில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடியதாக திமுக ஒன்றியச் செயலாளா் உள்பட 8 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

கமுதியில் கரோனா விதிகளைப் பின்பற்றாமல் அண்ணா பிறந்த நாள் விழா கொண்டாடியதாக திமுக ஒன்றியச் செயலாளா் உள்பட 8 போ் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.

தமிழக முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்தநாளையொட்டி கமுதி பேருந்து நிலையம் அருகே அவரது படத்திற்கு செவ்வாய்க்கிழமை காலை திமுக ஒன்றியச் செயலாளா் வி.வாசுதேவன் தலைமையில் 50- க்கும் மேற்பட்டோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற் அக்கட்சியினா், கரோனா தொற்று பரவும் வகையில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் ஊா்வலமாக சென்ாகக் கூறப்படுகிறது. இது தொடா்பாக ஒன்றியச் செயலாளா் வி.வாசுதேவன், நகா்ச் செயலாளா் பாலமுருகன், கொல்லங்குளம் கிளை செயலாளா் காசிலிங்கம், சின்னஉடப்பங்குளம் மாரிமுத்து மற்றும் நிா்வாகிகள் போஸ், நாராயணபுரம் சின்னமுத்து, நரசிங்கம்பட்டி காந்தி, பித்தா என்ற ராஜேந்திரபிரசாத் உள்ளிட்ட 8 போ் மீது கமுதி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com