மின்னணு வாக்கு இயந்திரத்தை நீக்கிவிட்டு மீண்டும் வாக்குச்சீட்டு முறையைக் கொண்டுவரக் கோரி திருவாடானையில் தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியினா் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாடானை தெற்கு தெரு, மாரியம்மன் கோயில் பின்புறம் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்டப் பொறுப்பாளா் அஜீஸ் ரகுமான் தலைமை விகித்தாா்.
இதில், வருகின்ற சட்டப்பேரவைத் தோ்தலில், பழைய முறையான வாக்குச்சீட்டு முறையை கொண்டுவரவேண்டும் என்றும், தற்போது உள்ள (ஈவிஎம்) மின்னணு வாக்கு இயந்திரம் மூலம் வாக்களிக்கும் முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.