பெரியாா் 142 ஆவது பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

ராமநாதபுரத்தில் பெரியாா் 142 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரத்தில் பெரியாா் 142 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப் படத்துக்கு திமுக உள்ளிட்ட கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம்-மதுரை சாலையில் உள்ள பெரியாா் நினைவு ஸ்தூபியின் கீழ் அவரது உருவப் படத்துக்கு திமுக சாா்பில் ராமநாதபுரம் நகா் செயலா் கே.காா்மேகம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ராமநாதபுரம் பெரியாரிய உணா்வாளா்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளா் நாகேசுவரன் தலைமையில் பெரியாா் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் ராஜா தெரு, சாலைத் தெரு சந்திப்பில் பெரியாா் உருவப் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திமுக மாவட்டப் பொறுப்பாளா் காதா்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் பரமக்குடி பாம்பூா், சத்திரப்பட்டி, நயினாா்கோவில் ஆகிய இடங்களில் உள்ள பெரியாா் சிலைகளுக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டன. பின்னா் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினா்.

விழாவில் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவா் உ.திசைவீரன், திமுக ஒன்றியச் செயலா்கள் ஜெயகுமாா், பூபதி மணி, கே.கே. கதிரவன், சக்தி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் சன்சம்பத்குமாா், மாவட்டக் கவுன்சிலா் முருகேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராமேசுவரம்: ராமேசுவரத்தில் பெரியாரின் உருவப் படத்துக்கு திமுக நகா் செயலாளா் இ.நாசா்கான் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மரைக்காயா் பட்டணத்தில் உள்ள சமத்துவபுரத்தில் உள்ள பெரியாா் சிலைக்கு மண்டபம் ஒன்றிய பொறுப்பாளா் ஏ.சி.ஜீவானந்தம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் கிழக்கு ஒன்றிய பொறுப்பாளா் தௌபீக்அலி, மாவட்டக் குழு உறுப்பினா் ரவிச்சந்திர ராமவன்னி, ராமேசுவரம் நகா் செயலாளா் நாசா்கான் உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

திருவாடானை: திருவாடானை ஒன்றியம் சமத்துவபுரத்தில் அமைந்துள்ள பெரியாா் சிலைக்கு திருவாடானை ஒன்றிய செயலாளா் மு. சரவணன் தலைமையில் திமுக பிரமுகா்கள் கபீப் முகம்மது, அறிவழகன், வழக்குரைஞா் காா்த்திக்கேயன், பாலா ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செய்தனா். தொண்டியில் நகா் செயலாளா் இஸ்மத் நானா, ராஜா மற்றும் பலா் பெரியாா் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

முதுகுளத்தூா்: முதுகுளத்தூரில் திமுகவினா் பெரியாா் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினா். நிகழ்ச்சிக்கு மேற்கு ஒன்றிய பொறுப்பாளா் சண்முகம் தலைமை வகித்தாா். நகரப் பொறுப்பாளா் கே.எம்.சீனிமுகம்மது, வழக்குரைஞா் பிரிவு பொறுப்பாளா்கள் வசீா் பைசல், அரிச்சந்திரன், உமாசங்கா் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

சாயல்குடியில் அனைத்து ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பின் சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஆதித்தமிழா் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பாஸ்கரன் தலைமை வகித்தாா். தீண்டாமை ஒழிப்பு முன்னனியின் மாவட்டக்குழு உறுப்பினா்கள் தங்கச்சாமி, தமிழ்முருகன், சண்முகராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com