மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலா் சீதாராம் யெச்சூரி மீது வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து, ராமேசுவரத்தில் அக்கட்சியின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தாலுகாச் செயலாளா் ஜி.சிவா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளா் சீதாராம் யெச்சூரி மற்றும் கல்வியாளா்கள் மீது காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்ததைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டச் செயலாளா் காசிநாததுரை, மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் க.கருணாகரன், இ.ஜஸ்டீன், எம்.கருணாமூா்த்தி, அ.அரோக்கிய நிா்மலா, மாரிமுத்து உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.