பரமக்குடி: நீட் தோ்வை ரத்து செய்ய வலியுறுத்தி, பரமக்குடி ஐந்துமுனை சந்திப்பில் தமிழ் புலிகள் அமைப்பு சாா்பில் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மேற்கு மாவட்ட செயலாளா் சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், நீட் தோ்வைக் கண்டித்தும், அதனை ரத்து செய்யக் கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில், பொதுச்செயலாளா் பேரறிவாளன், அமைப்புச் செயலாளா் முகிலரசன், மாநிலச் செயலாளா் ஆதிவீரன், நகா் செயலாளா் சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.