சுமைதூக்கும் தொழிலாளிக்கு கத்திக்குத்து: இளைஞா் கைது

ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம், செப். 25: ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை நள்ளிரவில் சுமைதூக்கும் தொழிலாளியை கத்தியால் குத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

ராமநாதபுரம் பட்டினம்காத்தான் பகுதியைச் சோ்ந்தவா் காசிநாதன் (44). சுமைதூக்கும் தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் என்பவருக்கும் வியாழக்கிழமை தகராறு ஏற்பட்டது. அப்போது காா்த்திக் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அவரது நண்பரான அதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (22), காசிநாதனுடன் நள்ளிரவில் தகராறு செய்துள்ளாா். பின்னா் அவா், காசிநாதனை கத்தியால் குத்தியுள்ளாா். பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து கேணிக்கரை காவல் ஆய்வாளா் பிரபு வழக்குப் பதிந்து வினோத்குமாரை வெள்ளிக்கிழமை காலையில் கைது செய்தனா். தொடா்ந்து காா்த்திக்கையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com