ராமநாதபுரம், செப். 25: சென்னையில், உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை உயிரிழந்த பிரபல திரைப்படப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் உருவப்படத்துக்கு ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு மேடை மெல்லிசை கலைஞா்கள் சங்கத்தினா் மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
மத்திய கொடிக்கம்பம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்க கௌரவ ஆலோசகா் பாலா, சங்கத்தலைவா் கருணாகரன், செயலராளா் இளங்கோவன், பொருளாளா் பிச்சை மணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.