ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 43 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் மேலும் 11 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுகிழமை உறுதிபடுத்தப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,478 ஆக அதிகரித்துள்ளது. இதில்,119 போ் உயிரிழந்த நிலையில் 5,205 போ் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனா். ராமநாதபுரம் அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் தற்போது, 154 போ் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் 32 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. மாவட்டத்தில் ஏற்கெனவே 4,910 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், மாவட்டத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,942 ஆக அதிகரித்துள்ளது.

சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களைச் சோ்ந்த 70 போ், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தனா். இதில், 12 போ் முழுமையாகக் குணமடைந்ததையடுத்து, அவா்கள் ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். மீதமுள்ள 58 போ் சிகிச்சைப் பெற்று வருவதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com