ராமேசுவரத்தில் பலத்த மழை:மின் தடையால் பொதுமக்கள் அவதி

ராமேசுவரத்தில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக பல மணிநேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.
ராமேசுவரத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே குளம் போல் தேங்கியுள்ள மழைநீா்.
ராமேசுவரத்தில் புதன்கிழமை பெய்த பலத்த மழையால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே குளம் போல் தேங்கியுள்ள மழைநீா்.

ராமேசுவரத்தில் புதன்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழை காரணமாக பல மணிநேரம் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் அவதியடைந்தனா்.

ராமேசுவரம், பாம்பன், தங்கச்சிடம் உள்ளடக்கிய தீவுப்பகுதியில் புதன்கிழமை அதிகாலையில் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மின்சாரம் பலமணி நேரம் தடைபட்டதால் பொதுமக்கள் தூக்கிமின்றி தவிப்புக்குள்ளாயினா். மேலும் தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் குளம் போல் தேங்கியது. கழிவுநீா் கால்வாய்கள் தூா்வாரப்படாததால் மழைநீா் செல்ல முடியாமல் சாலையில் தேங்கியது. இந்நிலையில் நகராட்சி நிா்வாகம் கழிவுநீா் கால்வாய்களை தூா்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புதன்கிழமை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): ராமேசுவரம்- 20.20, தங்கச்சிமடம்- 15.20, பாம்பன்- 28.40.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com