முதுகுளத்தூரில் திமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமென பேனா் வைத்ததாக முதுகுளத்தூா் போலீஸாா் புதன்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனா்.
முதுகுளத்தூரில்இருந்து பரமக்குடி செல்லும் வழியில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி அருகில் முதுகுளத்தூா் சட்ட மன்ற திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க கோரி 3 ப்ளக்ஸ்பேனா்களை அனுமதியின்றி வைத்துள்ளாா்.இதனால் முதுகுளத்தூா் காவல்நிலையத்தில் பறக்கும்படை அலுவலா் பாா்த்தசாரதி கொடுத்த புகாரின் பேரில் முதுகுளத்தூா் காவல்துறை ஆய்வாளா் ரவீந்திரன் தோ்தல் விதிமுறைகளை மீறியதாக திமுக வேட்பாளா் ஆா்.எஸ்.ராஜகண்ணப்பன் மீது வழக்கு பதிவு செய்துள்ளாா்.