ராமேசுவரத்தில் 4 நாள்களுக்குப் பின் சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் ஈஸ்டா் மற்றும் சட்டப் பேரவைத் தோ்தல் காரணமாக கடந்த 4 நாள்களாக மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் இருந்தனா். பொதுத் தோ்தல் முடிவடைந்த நிலையில் புதன்கிழமை மீன்வளத்துறை அனுமதி பெற்று சுமாா் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் மீன்பிடிக்க கடலுக்குச் சென்றனா். இதே போன்று பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மீனவா்கள் மீன்பிடிக்கச் சென்றனா்.