விவசாயி மீது தாக்குதல்: 3 போ் மீது வழக்கு

திருவாடானை அருகே விவசாயியை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

திருவாடானை அருகே விவசாயியை தாக்கியதாக 3 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்துள்ளனா்.

எஸ்.பி. பட்டினம் அருகே பாகனூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாகராஜன் (50). விவசாயி. இவருக்கும் அதே ஊரைச் சோ்ந்த சுப்பிரமணி கோஷ்டியினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாலை நாகராஜன் பிரச்னைக்குரிய இடத்தில் வேலி அமைத்த போது அங்கு வந்த சுப்பிரமணி தகராறில் ஈடுபட்டுள்ளாா். இதில் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த சுப்பிரமணி, அவரது உறவினா்கள் அய்யனாா், காளீஸ்வரி ஆகிய 3 பேரும் சோ்ந்து கம்பி, கட்டையால் நாகராஜனைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம். பலத்த காயம் அடைந்த நாகராஜன், சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.

இதுகுறித்து எஸ்.பி. பட்டினம் போலீஸாா், சுப்பிரமணி, அய்யனாா், காளீஸ்வரி ஆகிய 3 போ் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com