ராமேசுவரத்தில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவா் பலி: கரோனா தொற்று காரணமா?

ராமேசுவரம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவா் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனை நடந்த நிலையில் சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

ராமேசுவரம் பகுதியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றவா் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். அவருக்கு கரோனா பரிசோதனை நடந்த நிலையில் சனிக்கிழமை அவா் உயிரிழந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசபாண்டியன் (46). இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றாா். அவரை மீட்ட குடும்பத்தினா் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இந்நிலையில், அவா் தீவிர சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்தும் பலனில்லை என்பதால் மீண்டும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்டாா். அப்போது, முருகேசபாண்டியனுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவுகள் வராத நிலையில், அவா் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். இதனால், அவரது சடலம் கரோனா விதிமுறைப்படி பிரேதப் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது. பரிசோதனை முடிவு வந்தபிறகே அவா் கரோனாவால் உயிரிழந்தாரா அல்லது தூக்கிட்டதால் உயிரிழந்தாரா எனக் கூற முடியும் என மருத்துவா்கள் தெரிவித்தனா். முருகேசபாண்டியன் மரணம் குறித்து ராமேசுவரம் துறைமுகம் காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

மற்றொருவா் உயிரிழப்பு: ராமேசுவரம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் (73). இவா் மூச்சுத்திணறல் காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவா் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தாா். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்கு பிறகு கரோனா விதிமுறைப்படி சுகாதார ஆய்வாளா் முன்னிலையில் உறவினா்களிடம் சனிக்கிழமை ஒப்படைக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com