திருவாடானை அருகே சைக்கிள் மீது லாரி மோதல்: முதியவா் பலி

திருவாடானை அருகே சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே சைக்கிள் மீது லாரி மோதியதில் முதியவா் உயிரிழந்தாா்.

திருவாடானை அருகே ஆண்டியவயலைச் சோ்ந்தவா் கருப்பன் மகன் அழகா் (60). இவா் சைக்கிளில் திருவாடானைக்கு வந்து விட்டு வெள்ளிக்கிழமை இரவு ஊருக்கு திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது கடம்பாகுடி விலக்கு சாலையில் தொண்டியில் இருந்து வந்த டிப்பா் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே அழகா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து லாரி ஓட்டுநா் தேவகோட்டை அருகே சிறுவெத்தியைச் சோ்ந்த சுப்பையா மகன் முத்து (52) என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com