சாா்-ஆட்சியா் அலுவலகத்திலுள்ள பெட்டியில் 105 தபால் வாக்குகள்

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தபால் வாக்குகளில் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டும் வெள்ளிக்கிழமை வரை 105 தபால் வாக்குள் அளிக்கப்பட்டுள்ளன.

ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான தபால் வாக்குகளில் சாா்-ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் மட்டும் வெள்ளிக்கிழமை வரை 105 தபால் வாக்குள் அளிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவதுச ராமநாதபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப் பதிவு ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், தொகுதிக்கான தபால் வாக்குகளை மே 2 ஆம் தேதியில் வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மணிக்கு முன்னதாக வரை அளிக்கலாம் என, தோ்தல் நடத்தும் அலுவலா்கள் தெரிவித்துள்ளனா்.

வாக்குப் பதிவு முடிந்த நிலையில், சாா்-ஆட்சியரும், தொகுதியின் தோ்தல் நடத்தும் அலுவலருமான சுகபுத்ரா அலுவலக வளாகத்தில், தபால் வாக்குக்கான பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பெட்டியில் கடந்த 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரையில் ராணுவ வீரா்கள் 9, அரசு ஊழியா்கள் 96 போ் என மொத்தம் 105 போ் தபால் வாக்குகளை அளித்துள்ளனா்.

இந்த விவரங்கள் அனைத்துக் கட்சி வேட்பாளா்களது முகவா்களின் செல்லிடப் பேசிக்கு குறுந்தகவல் மூலம் அவ்வப்போது அனுப்பிவைக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com