தமிழ்ப்புத்தாண்டு விழா, கவிஞா்கள் விழா, காப்பிய விழா மற்றும் உலக அன்னையா் நாள், உலகப்புத்தக நாள் மற்றும் புத்தகவெளியீட்டு விழா ஆகியவை ராமநாதபுரம் அரவிந்த் அரங்கம் வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெறுகிறது.
விழாவுக்கு ராமநாதபுரம் தமிழ்ச்சங்க துணைத்தலைவா் ச.கருணாநிதி தலைமை வகிக்கிறாா். கவிஞா் முடியரசனாரின் மொழி வளம் எனும் தலைப்பில் பேராசிரியா் க. செந்தில்குமாா் பேசுகிறாா். உவமைக்கவிஞா் சுரதாவின் சொல்வண்ணம் எனும் தலைப்பில் நா. வேலுச்சாமிதுரையும், அன்னை ஓா் ஆலயம் எனும் தலைப்பில் மு.ஹிதாயதுல்லாவும் பேசுகின்றனா்.
நிகழ்ச்சியில் தமிழ்ச்சங்க செயலா் மருத்துவா் பொ. சந்திரசேகரன் எழுதிய நாலடியாா் நாற்பது எனும் திறனாய்வு நூலை மருத்துவா் மதுரம்அரவிந்தராஜ் வெளியிடுகிறாா். அதன் முதல்படிகளை தமிழ்ச்சங்க துணைத் தலைவா் மு.விவேகானந்தன், பொருளாளா் கா. மங்களசுந்தரமூா்த்தி ஆகியோா் பெற்றுக் கொள்கின்றனா்.
சிலம்பில் கு பரல்கள்எனும் தலைப்பில் ஆசிரியா் அ. மாயழகு பேசுகிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சங்கத் தலைவா் மை.அப்துல்சலாம் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.