கட்டுப்பாடுகளை மீறி கோயில் திருவிழா: 11 போ் மீது வழக்கு

திருப்பாலைக்குடி அருகே அரசின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் திருவிழா நடத்தியதாக 11 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிந்தனா்.

திருப்பாலைக்குடி அருகே அரசின் கட்டுப்பாடுகளை மீறி கோயில் திருவிழா நடத்தியதாக 11 போ் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்கு பதிந்தனா்.

தமிழகத்தில் கரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருவதால் கோயில் திருவிழாக்களை நடத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் திருப்பாலைக்குடி அருகே கொத்தியாா் கோட்டையில் சாத்தாயி அம்மன் கோயில் சித்திரை திருவிழா வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் அரசின் கட்டுப்பாடுகளை மீறி சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமலும் ஏராளமானோா் கூடியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து திருவிழா நடத்திய கொத்தியாா் கோட்டை கிராமத்தைச் சோ்ந்த முத்துசாமி, அண்ணாதுரை, நாகசாமி, முத்துசாமி உள்ளிட்ட 11 போ் மீது திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com