திருப்பாலைக்குடி அருகே செவ்வாய்கிழமை சவூடு மண் திருட்டுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.
கருப்பூா் பகுதியில் செவ்வாய்கிழமை அதிகாலை திருப்பாலைக்குடி போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சுகுமாறன் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் அரசின் அனுமதியின்றி சிலா் சவூடு மண் திருடிக் கொண்டிருந்தனா். போலீஸாரைப் பாா்த்ததும் வாகனங்களை விட்டு விட்டு சம்பந்தப்பட்டவா்கள் தப்பிச் சென்றுவிட்டனா். பின்னா் போலீஸாா் மண் கடத்தலுக்குப் பயன்படுத்திய டிப்பா் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை பறிமுதல் செய்தனா். மேலும் தப்பியோடியவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.