ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 105 பேருக்கு கரோனா தொற்று உறுதி

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 105 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 105 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 7,122 போ் கரோனா தொற்று பாதிப்புக்குள்ளாயினா். இதில் 6,612 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். தற்போது தொற்று பாதிக்கப்பட்ட 377 போ் மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதில் 138 போ் கிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே 6,756 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை புதிதாக 64 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,820 ஆக அதிகரித்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 94 பேரில், 35 போ் குணமடைந்ததை அடுத்து செவ்வாய்க்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 59 போ் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com