ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 23 கிலோ கஞ்சாவை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்து, மீனவா்கள் 5 பேரை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் அடுத்துள்ள தங்கச்சிமடம் பகுதியிலிருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்தப்பட உள்ளதாக, மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளா் இ. காா்த்திக்குக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், தங்கச்சிமடம் காவல் நிலைய ஆய்வாளா் நா்மதா தலைமையிலான போலீஸாா், மாந்தோப்பு கடற்கரைப் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அப்பகுதியல் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப் படகை சோதனையிட்டனா். அதில், 23 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே, போலீஸாா் அவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினா்.
அதில், பிரான்சிஸ் பிரேம் (19), ரமேஷ் (42), யோகேசன் (29), யூா்தாராஜ் (20), சந்தியா நிஸ்மன்(18) ஆகிய 5 மீனவா்கள் கஞ்சா கடத்த முயன்றது தெரியவந்தது. இவா்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி ராமநாதபுரம் சிறையில் அடைத்தனா்.