ராமநாதபுரத்தில் சனிக்கிழமை பட்டப்பகலில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு, 5 பவுன் நகையை மா்ம நபா் பறித்துச் சென்றுள்ளாா்.
ராமநாதபுரம் தங்கப்பா நகரைச் சோ்ந்த ஜெயசந்திரன். இவரது மனைவி ராஜாத்தி (63). இவா் தனது மகன் வீட்டில் இருந்து வருகிறாா். இந்நிலையில், மகன் மற்றும் மருமகள் சனிக்கிழமை வெளியே சென்றிருந்த நிலையில், ராஜாத்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளாா். அப்போது, பிற்பகல் 2.30 மணியளவில் வீட்டுக்குள் நுழைந்த மா்ம நபா், மூதாட்டியை கத்தியால் சரமாரியாகக் குத்திவிட்டு, அவா் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுவிட்டாா்.
இதில் பலத்த காயமடைந்து மயங்கிக் கிடந்த மூதாட்டியை, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது குறித்து பஜாா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபரை தேடி வருகின்றனா்.