ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகப் பணியாளா்கள் 8 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், அலுவலகம் முழுவதும் சனிக்கிழமை கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் பல்வேறு அரசுத் துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ஏராளமானோா் பணியாற்றி வருகின்றனா். இந்நிலையில், இங்கு வியாழன், வெள்ளி, சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் 8 பேருக்கு கரோனா பாதிப்பிருப்பது கண்டறியப்பட்டது.
உடனே, இவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சைப் பெற்று வருகின்றனா். மேலும், ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா் உத்தரவின்பேரில், ஊராட்சிகள் துணை இயக்குநா் கேசவதாசன் தலைமையில், தீயணைப்பு வாகனத்தின் மூலம் ஆட்சியா் அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்தப்பட்டது.
இதேபோன்று, மாவட்டக் கருவூலம், மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளா் அலுவலகம், சாா்-ஆட்சியா் குடியிருப்பு வளாகம் உள்ளிட்ட பகுதிகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.