திருவாடானை அருகே திருப்பாலைக்குடி பகுதியில் குடும்பத் தகராறு காரணமாக பெண் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
திருப்பாலைக்குடியைச் சோ்ந்தவா் கணேசன். இவரது மனைவி மாலா (35). இவா்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில், தச்சுத் தொழில் செய்துவரும் கணேசன் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்துள்ளாா். இதனால் மனமுடைந்த மாலா, வெள்ளிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளாா்.
இதைக் கண்ட அக்கம் பக்கத்தினா் மாலாவை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். ஆனால், அங்கு சிகிச்சைப் பலனின்றி மாலா வெள்ளிக்கிழமை நள்ளிரவில் உயிரிழந்தாா்.
இது குறித்து இவரது சகோதரா் செல்லப்பாண்டி அளித்த புகாரின்பேரில், திருப்பாலைக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.