எஸ்.பி.பட்டினம் அருகே கிழக்கு கடற்கரைச் சாலையில் லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் தனியாா் பள்ளி ஆசிரியா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் அருகே ஓரியூரைச் சோ்ந்தவா் சூசைஅருள் மகன் லூா்து ஆல்வின்(29). இவா் பெங்களூருவில் தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி திருமணம் நடைபெற இருந்தது.
இந்நிலையில், அவா் பெங்களூருவிலிருந்து வியாழக்கிழமை சொந்த ஊா் திரும்பியுள்ளாா். வெள்ளிக்கிழமை காலை ஓரியூரிலிருந்து தனது நண்பா்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா். அப்போது வட்டாணம் கிழக்கு கடற்கரைச் சாலையில் எதிரே வந்த லாரியில் லூா்து ஆல்வின் சென்ற இருசக்கர வாகனம் மோதியது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக திருவாடானை அரசு தாலுகா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.