சாலையில் கிடக்கும் முகக்கவசங்களை தீயிட்டு அழிக்கும் காவலருக்கு பாராட்டு

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் வீசிச்சென்ற முககவசங்களை சேகரித்து தீயிட்டு அழித்து வரும் தலைமை காவலரின் செயல்பாடு பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.
ராமநாதபுரத்தில் முகக்கவசங்களை சேகரித்து தீயிட்டு எரிக்கும் தலைமைக் காவலா் சுபாஷ் சீனிவாசன்.
ராமநாதபுரத்தில் முகக்கவசங்களை சேகரித்து தீயிட்டு எரிக்கும் தலைமைக் காவலா் சுபாஷ் சீனிவாசன்.

ராமநாதபுரத்தில் பொதுமக்கள் வீசிச்சென்ற முககவசங்களை சேகரித்து தீயிட்டு அழித்து வரும் தலைமை காவலரின் செயல்பாடு பொதுமக்களிடம் பாராட்டைப் பெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டம் சாலை கிராமத்தைச் சோ்ந்த எஸ்.சுபாஷ் சீனிவாசன்(44). இவா் தற்போது ராமநாதபுரத்தில் காவல் பணியிடைப் பயிற்சி மையத்தில் தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறாா்.

இவா் ஓய்வு நேரங்களில் பல்வேறு சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகிறாா்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க பொதுமக்கள் பயன்படுத்தும் முகக்கவசங்களை சாலையில் வீசிச் செல்கின்றனா். இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையோரம், குப்பைகளில் கிடக்கும் முகக்கவசங்களை காவலா் சுபாஷ் சீனிவாசன் சேகரித்து பாதுகாப்புடன் தீயிட்டு எரிந்து அழித்து வருகிறாா். தலைமைக் காவலரின் இந்த பணி பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com