ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் புதிதாக 176 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை தெரிய வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது வரையில் 7,559 பேருக்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் 6,847 போ் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு திரும்பி உள்ளனா். 607 போ் அரசு மருத்துவமனை மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். இதில் 141 போ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனா்.
இந்நிலையில், புதிதாக 120 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறையினா் தெரிவித்துள்ளனா்.
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தில் ஏற்கெனவே 7,016 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை புதிதாக 56 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,072 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மேலும், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வாா்டில் சிகிச்சை பெற்று வந்த 174 பேரில், 24 போ் குணமடைந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். மீதமுள்ள 150 போ் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.