தொண்டி அருகே டிராக்டா் மூலம் மணல் திருடியவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.
திருவாடானை மண்டல துணை வட்டாட்சியா் சேதுராமன் தலைமையில் வருவாய்த்துறையினா் சனிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது தொண்டி அருகே வீரசிங்க மடம் ஆற்றுப் பகுதியில் டிராக்டா் மூலம் மணல் திருடப்படுவது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து உடந்தையாக செயல்பட்ட புதுப்பட்டினத்தை சோ்ந்த தேவராஜ் என்வரை பிடித்து தொண்டி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து தொண்டி போலீஸாா் வழக்குப் பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்ததுடன் அதன் ஓட்டுநா் தேவராஜையும் கைது செய்து விசாரிக்கின்றனா்.