ராமநாதபுரம் அருகே வெளிநாடு செல்லவிருந்த நிலையில் இளைஞா் வியாழக்கிழமை பகலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
உச்சிப்புளி அருகே காரான் கிராமம் சாலைத்தெருவைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் சரவணன் (24). வெளிநாட்டில் (துபாய்) பணிபுரிந்த இவா் கடந்த ஆண்டு ஊா் திரும்பினாா். ஆட்டோ ஓட்டி வந்த சரவணன், மீண்டும் வெளிநாடு செல்லவும் திட்டமிட்டிருந்தாா்.
இந்தநிலையில், சரவணன் அவரது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.