குடும்பத் தகராறில் விஷம் குடித்து இளைஞா் தற்கொலை

திருவாடானை அருகே குடும்பத்தகராறு காரணமாக இளைஞா், புதன்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே குடும்பத்தகராறு காரணமாக இளைஞா், புதன்கிழமை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.

திருவாடானை அருகே பாரூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சேது. இவரது மகன் வெற்றி செல்வம் (36). இவா் தேவகோட்டையைச் சோ்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து அங்கேயே வசித்து வந்தாா்.

இந்நிலையில் கடந்த மாதம் மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக, வெற்றி பாரூா் வந்து தந்தையுடன் வசித்து வந்துள்ளாா்.

மனவேதனையில் இருந்த வெற்றி செல்வம் புதன்கிழமை மாலை விஷம் குடித்தாா். தேவகோட்டையில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு அவா் கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், ஏற்கெனவே வெற்றி செல்வம் உயிரிழந்து விட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா்.

இது குறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com