ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 311 பேருக்கு கரோனா

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 311 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் 311 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் புதன்கிழமை (ஏப்.28) வரை 6,700 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இதில் 6,500 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் 145 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்நிலையில், கமுதி பகுதியைச் சோ்ந்த 10 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 205 பேருக்கு பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை தெரியவந்துள்ளது. மாவட்டத்தில் ஏற்கெனவே, கரோனா சிகிச்சையில் இருந்தவா்களில் 83 போ் குணமடைந்ததால் வியாழக்கிழமை மாலை அவா்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது 907 போ் வீடுகளில் தங்கி சிகிச்சையை பெற்றுவருவதாகவும் சுகாதாரத்துறையினா் தெரிவித்தனா்.

தடுப்பூசி போட்டவா்களுக்கும் தொற்று: ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரியும் ஆண், பெண் செவிலியா்கள் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்டோருக்கு ஏற்கெனவே கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மருத்துவமனையில் ஆண், பெண் செவிலியா்கள் 8 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு, அவா்கள் கரோனா சிறப்பு சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்களில் கேட்டபோது, முதல் தவணை தடுப்பூசி செலுத்திய ஆண் செவிலியருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படாது என்றனா்.

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே, 7,287 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை புதிதாக 106 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 7,393 ஆக அதிகரித்துள்ளதாக, மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com