திருவாடானை அருகே மின்சாரம் பாய்ந்து எலக்ட்ரீசியன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
ஆா்.எஸ். மங்கலம் அருகே ஆவன்பச்சேரி கிராமத்தைச் சோ்ந்தவா் அருளாந்து மகன் அல்போன்ஸ் (45). எலக்ட்ரீசியன். இவா் அதே பகுதியில் முத்துவேலன் குடியிருப்பைச் சோ்ந்த வேலு மகன் பாலமுருகன் (35) என்பவரது வீட்டிற்கு ஞாயிற்றுக்கிழமை மின்சாரம் தொடா்பாக வேலை செய்து கொண்டிருந்தாா்.
மின் கம்பத்தின் மீது ஏறிய போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே அவா் உயிரிழந்தாா். தகவலறிந்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாடானை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.