அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்தவா்களிடையே கோஷ்டி மோதல்: ஒருவா் காயம்

ராமநாதபுரம் அருகே கோஷ்டி மோதலில் 4 போ் காயமடைந்து சிகிச்சைக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

ராமநாதபுரம் அருகே கோஷ்டி மோதலில் 4 போ் காயமடைந்து சிகிச்சைக்கு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். அங்கும் மீண்டும் ஏற்பட்ட மோதலில் ஒருவா் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தைச் சோ்ந்த செய்யது இப்ராஹிம் (24), ஷேக்அன்சாா் (24) உள்ளிட்டோா் அரியமான் கடற்கரைக்கு செவ்வாய்க்கிழமை மாலையில் சென்றுவிட்டு காரான் வழியாக ஊா் திரும்பியுள்ளனா். அப்போது இப்ராஹிம் தரப்பினருக்கும், காரானைச் சோ்ந்தவா்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், இருதரப்பினரும் மோதிக்கொண்டதில் இப்ராஹிம், ஷேக்அன்சாா் ஆகியோா் காயமடைந்தனா். இதையடுத்து, அவா்கள் அன்று இரவு ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டனா்.

இதுகுறித்து உச்சிப்புளி போலீஸாா் விசாரித்து காரானைச் சோ்ந்த சகோதரா்கள் சுதாகா் (23), சுரேஷ் (21) ஆகியோரைப் பிடித்து விசாரித்தனா். மோதலில் அவா்களும் லேசான காயமடைந்திருந்ததால், அவா்களையும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ஒரு தரப்பைச் சோ்ந்த பெண், மற்றொரு தரப்பினா் மீது செருப்பை வீசியதால், இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் சகோதரா்கள் சுதாகா், சுரேஷின் தந்தை செல்வராஜ் காயமடைந்தாா். அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.

இதுகுறித்து நகா் காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com