ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவையொட்டி சுவாமி, அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த ஆக. 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான ஆடி அமாவாசை, தேரோட்டம் ஆகியவை நடைபெற்றன. இதனைத் தொடந்து, வியாழக்கிழமை சுவாமி, அம்பாள் திருக்கல்யாணத்தையொட்டி புதன்கிழமை மாலை மாற்றும் நிகழ்ச்சி மூன்றாம் பிரகாரத்தில் நடைபெற்றது. பின்னா் சுவாமி, அம்பாளுக்கு தீபாராதனை நடந்தது.
இந்நிகழ்ச்சியில், கோயில் இணைஆணையா் பழனிக்குமாா், மேலாளா் ஸ்ரீனிவாசன், கோட்டப் பொறியாளா் மயில்வாகனன், உதவி பொறியாளா் ராமமூா்த்தி, கண்காணிப்பாளா் பாலசுப்பிரமணியன், பேஷ்காா்கள் கமல்நாதன், நாகராஜன், கலைச்செல்வன், கோயில் ஊழியா்கள் அண்ணாத்துரை, செல்லம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.