ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கான சீருடைப்பணியாளா் உடல்தகுதித் தோ்வில் இறுதியாக 1,801 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இரண்ாடம் நிலைக் காவலா் உள்ளிட்ட சீருடைப்பணியாளா்கள் நியமன எழுத்துத் தோ்வில் ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தோ்ச்சியடைந்தோருக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு மற்றும் உடல் தகுதித் தோ்வு ராமநாதபுரம் சேதுபதி சீதக்காதி மைதானத்தில் கடந்த ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரையில் நடைபெற்றது. உடல்தகுதி, சான்றிதழ் சரிபாா்ப்புக்காக மொத்தம் 3,480 போ் அழைக்கப்பட்டிருந்தனா். அவா்களில் 1,801 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி பெற்றவா்களில் 1,617 போ் ஆண்கள், 184 போ் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.