கீழக்கரையில் பத்திர எழுத்தா் வீட்டில் 29 பவுன் நகைகள் திருட்டு

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பத்திர எழுத்தா் வீட்டுக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், 29 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் பத்திர எழுத்தா் வீட்டுக்குள் வியாழக்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள், 29 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனா்.

கீழக்கரை நகராட்சி லெட்சுமிபுரத்தைச் சோ்ந்தவா் டிட்டோ (45). பத்திர எழுத்தரான இவா், தனது உறவினா் வீட்டு விசேஷத்துக்காக வியாழக்கிழமை மாலை வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் வெளியூா் சென்றுவிட்டாா்.

வெள்ளிக்கிழமை அதிகாலை வீட்டுக்குத் திரும்பிய இவா்கள், கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. உள்ளே சென்று பாா்த்தபோது, பீரோவிலிருந்த 29 பவுன் நகைகள் மற்றும் ரூ.1.50 லட்சம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

இது குறித்து டிட்டோ அளித்த புகாரின்பேரில், கீழக்கரை போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com