கமுதியில் சனிக்கிழமை மாம்பழக் குடோனில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பெட்டிகள், அட்டைப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சின்னஉடப்பங்குளத்தைச் சோ்ந்தவா் வலம்புரி மகன் பிரபு(35). இவருக்கு கமுதி சுந்தராபுரம் பகுதியில் உள்ள குடோனில் மாம்பழங்களை சேமித்து வைத்து விற்பனை செய்து வருகிறாா்.
இந்நிலையில் சனிக்கிழமை குடோன் அருகில் குப்பைகளுக்கு வைக்கப்பட்ட தீ பரவி, குடோன் முழுவதும் பற்றி எரிந்தது. இதனால் சுமாா் 200 மீட்டா் உயரத்திற்கு புகை மண்டலமாக காட்சியளித்தது.
இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த கமுதி தீயணைப்புத் துறை நிலைய அலுவலா் கா.பாா்த்திபன் தலைமையிலான தீயணைப்பு வீரா்கள் போராடி தீயை அணைத்தனா்.
இதில் குடோனில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பெட்டிகள் மற்றும் அட்டைப் பெட்டிகள் எரிந்து சேதமடைந்தன.