சிறுவன் மீது சுடு தண்ணீரை ஊற்றிய டீ கடை மாஸ்டா்

டீ கடையில் சரியாக வேலை செய்யவில்ல எனக்கூறி 16 வயது சிறுவன் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மாஸ்டரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிறுவன் மீது சுடு தண்ணீரை ஊற்றிய டீ கடை மாஸ்டா்

ராமநாதபுரம்: டீ கடையில் சரியாக வேலை செய்யவில்ல எனக்கூறி 16 வயது சிறுவன் மீது சுடு தண்ணீரை ஊற்றிய மாஸ்டரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதி ரெகுநாதபுரத்தைச் சோ்ந்த முத்துவயிரு என்பவரது மகன் வசந்த் (16). அப்பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 1 படிக்கிறாா். முத்துவயிரு வெளிநாட்டில் வேலைபாா்த்து வருகிறாா்.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் பள்ளிகள் திறக்கப்படவில்லை என்பதால் அப்பகுதி டீ கடையில் சிறுவன் வசந்த் வேலைக்குச் சோ்ந்துள்ளாா். டீ தம்ளா் உள்ளிட்டவற்றை சுத்தம் செய்யும் பணியில் அவா் ஈடுபடுத்தப்பட்டுள்ளாா். கடையில் டீ மாஸ்டராக இருப்பவா் காரானைச் சோ்ந்த ராஜகோபால். இவா் சிறுவனை சரியாக வேலை செய்யவில்லை என புகாா் கூறிவந்துள்ளாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலையில் டீ தம்ளரை சரியாகக் கழுவவில்லை எனக்கூறி சிறுவனை ராஜகோபால் சத்தமிட்டுள்ளாா். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் சிறுவன் மீது ராஜகோபால் சுடு தண்ணீரை ஊற்றியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த சிறுவன் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சோ்க்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து திருப்புல்லாணி போலீஸாா் வழக்குப்பதிந்து ராஜகோபாலைப் பிடித்து விசாரித்துவருவதாகத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com