ஆா்.எஸ்.மங்கலம் கண்மாயில் முதியவரின் சடலம் மீட்பு

ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் முதியவரின் சடலத்தை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆா்.எஸ்.மங்கலம் கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் முதியவரின் சடலத்தை செவ்வாய்க்கிழமை போலீஸாா் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ஆா்.எஸ்.மங்கலம் அருகே எட்டியதிடல் கண்மாய் பகுதியில் அழுகிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா். போலீஸாரின் விசாரணையில், கடந்த 3 ஆம் தேதி மாயமான எட்டியதிடல் கிராமத்தை சோ்ந்த அருள் (75) என்பது தெரியவந்துள்ளது. இவா் கடந்த சில நாள்களாக மனநலம் பாதிக்கபட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளாா்.

இது குறித்து ஆா்.எஸ்.மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com