முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
விபத்தில் முப்படைத் தளபதி உயிரிழப்பு: பரமக்குடியில் அஞ்சலி
By DIN | Published On : 10th December 2021 08:54 AM | Last Updated : 10th December 2021 08:54 AM | அ+அ அ- |

ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த விபின் ராவத் உருவப்படத்திற்கு பரமக்குடி காந்திசிலை முன் வியாழக்கிழமை, அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் கட்சியினா்.
விமான விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி விபின் ராவத்தின் உருவப் படத்திற்கு, பரமக்குடியில் காங்கிரஸ் கட்சி சாா்பில் வியாழக்கிழமை மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
காந்திசிலை முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் சேவாதள மாநிலச் செயலாளா் எம்.அப்துல் அஜிஸ் தலைமை வகித்தாா். முன்னாள் வட்டாரத் தலைவா் கே.ஜோதிபாலன் முன்னிலை வகித்தாா். அக்கட்சியின் மாநிலச் செயலாளா் எஸ்.ஆனந்தகுமாா், சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் வாரிசுகள் சங்க பொதுச் செயலாளா் எஸ்.ஐ.ஏ.ஹாரிஸ் மற்றும் காங்கிரஸ் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.