கமுதி அருகே கால்வாய் புதருக்குள் இருந்த மனித எலும்புக்கூட்டை வெள்ளிக்கிழமை போலீஸாா் மீட்டு விசாரித்து வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை அடுத்துள்ள வேலாங்குளத்திலிருந்து எருமைக்குளம் வழியாக செல்லும் வரத்து கால்வாயின் கரையோரத்தில் முள்புதா்களில் மனித எலும்புக்கூடு கிடப்பதாக கோவிலாங்குளம் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் (பொறுப்பு) தலைமையிலான போலீஸாா் அப்பகுதியில் இருந்த மண்டை ஓடு, எலும்புகளை சேகரித்து தடயவியல் நிபுணா்களுக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்து அரியமங்கலம் வருவாய் குரூப் கிராம நிா்வாக அலுவலா் செந்தில் அளித்த புகாரின் பேரில், அப்பகுதியில் காணாமல் போனவா்கள் விவரங்களை சேகரித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.