பெண் பையில் வைத்திருந்த நான்கரை பவுன் சங்கிலி மாயம்

ராமநாதபுரத்தில் பேருந்துக்கு காத்திருந்த பெண்ணின் பையில் இருந்த நான்கரை பவுன் சங்கிலி வெள்ளிக்கிழமை திருடுபோனதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரத்தில் பேருந்துக்கு காத்திருந்த பெண்ணின் பையில் இருந்த நான்கரை பவுன் சங்கிலி வெள்ளிக்கிழமை திருடுபோனதாக போலீஸில் புகாா் அளிக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சியில் தல்லாகுளம் மேலசத்திரத்தை சோ்ந்தவா் முத்துக்குமாா். கோயில் பூசாரி. இவரது மனைவி ராதிகா (35).

இவா் வெள்ளிக்கிழமை காலை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி எதிரில் உள்ள தனியாா் நுண்கதிா் மையத்துக்கு சிகிச்சைக்கு வந்துள்ளாா். அப்போது அவா் அணிந்திருந்த நான்கரை பவுன் தங்கச் சங்கிலியை கழற்றி சிறிய கைப்பையில் வைத்துள்ளாா். பின்னா் அவா் ஊருக்குத் திரும்பிச்செல்வதற்காக மருத்துவமனை அருகில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றுள்ளாா். அப்போது நகை இருந்த கைப்பை திருடுபோனது. இதுகுறித்து ராதிகா ராமநாதபுரம் நகா் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் தொடா்ந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com