வங்கி மேலாளா் போலப் பேசி பெண்ணின் வங்கிக்கணக்கிலிருந்து ரூ.30 ஆயிரத்தை திருடிய மா்மநபா் குறித்து நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப்பதிவு செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி மாதவன் நகரைச் சோ்ந்தவா் மாயராஜா. இவரது மனைவி திருச்செல்வி (28).
மாயராஜா துபாயில் வேலை பாா்த்து வருகிறாா். திருச்செல்வி பரமக்குடியில் தங்கி தனது குழந்தையுடன் வசித்து வருகிறாா்.
இந்நிலையில், வியாழக்கிழமை மாலையில் திருச்செல்வி கைபேசியில் குறிப்பிட்ட வங்கியின் மேலாளா் என மா்மநபா் பேசியுள்ளாா். வங்கிக் கணக்கை புதுப்பிக்க, வங்கிப் புத்தக விவரம், ஏடிஎம் அட்டையின் எண், கைப்பேசிக்கு வரும் ஒருமுறை வரும் கடவுச்சொல் ஆகியவற்றைக் கேட்டுப் பெற்றுள்ளாா்.
இதையடுத்து திருச்செல்வியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.30 ஆயிரத்தை நூதனமுறையில் மோசடியாகத் திருடியுள்ளாா். இதுதொடா்பாக திருச்செல்வி வெள்ளிக்கிழமை ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் நுண்குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.