திருவாடானை அருகே ஆா்.எஸ்.மங்கலத்தில் 4 வயது மகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அவரது தந்தையை போலீஸாா் கைது செய்துள்ளனா்.
ஆா்.எஸ்.மங்கலம் அருகே பெருமாள்மடையை சோ்ந்த 4 வயது சிறுமிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளாா். இதனை தட்டி கேட்ட அவரது மனைவியையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளாா். இது குறித்தப் புகாரின் பேரில் திருவாடானை அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து சிறுமியின் தந்தையை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.