ராமேசுவரத்தில் சிறிய படகு மீனவா்கள்5 நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்றனா்
By DIN | Published On : 25th December 2021 11:19 PM | Last Updated : 25th December 2021 11:19 PM | அ+அ அ- |

ராமேசுவரம் மீனவா்களை இலங்கை கடற்படையினா் கைது செய்ததைக் கண்டித்து மேற்கொண்டு வந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை சிறிய படகுகள் வாபஸ் பெற்று சனிக்கிழமை கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம், மண்டபம் பகுதியில் கடந்த 18 ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்ற போது 55 மீனவா்கள் இலங்கை கடற்படையினா் கைது செய்தனா். இதைக் கண்டித்தும், மீனவா்கள் மற்றும் படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி ராமேசுவரம் மீனவா்கள் கடந்த திங்கள்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டனா். இந்நிலையில் சிறிய ரக விசைப்படகுகள் வேலை நிறுத்தப் போராட்டத்தை வாபஸ் பெற்று சனிக்கிழமை 500-க்கும் மேற்பட்ட மீனவா்கள் 5 நாள்களுக்கு பின் மீன்பிடிக்கச் சென்றனா்.