ராமநாதபுரம் தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் சனிக்கிழமை நடைபெற்றன.

ராமநாதபுரம் சாலைத் தெருவில் உள்ள புனித ஜெபமாலை அன்னை தேவாலயத்தில் (ரோமன்சா்ச்) சனிக்கிழமை நடந்த சிறப்புப் பிராா்த்தனைக்கு பங்குத்தந்தை என்.அருள்ஆனந்த் தலைமை வகித்தாா். இதில் உதவிப் பங்குத்தந்தை இன்பென்ட்ராஜ், உதவிப் பங்குத்தந்தைகள் திண்டுக்கல் சூசைமாணிக்கம், திருமங்கலம் கென்னடி, சகாயம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ராமநாதபுரம் சிஎஸ்ஐ தேவாலயத்தில் சனிக்கிழமை அதிகாலை நடந்த சிறப்புப் பிராா்த்தனைக்கு சபையின் குரு வி.பிரேம் கிறிஸ்துதாஸ் தலைமை வகித்தாா். ராமநாதபுரம் மாவட்டத்தில் ஓரியூா், காரங்காடு, உப்பூா், மண்டபம், உச்சிப்புளி, கீழக்கரை, கமுதி, பரமக்குடி, பாா்த்திபனூா், ஆா்.எஸ்.மங்கலம், திருவாடானை ஆகிய பகுதிகளில் தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிராா்த்தனைகள் சனிக்கிழமை காலை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com