முதுகுளத்தூா் அருகே மது போதையில் தாயை தாக்கிய மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகேயுள்ள வெள்ளத்துரை மகன் முனீஸ் ( எ) முனியசாமி(31). இவா் இரவில் மது போதையில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தாய் வழிவிட்டாளை தாக்கியதாகவும் தட்டிக்கேட்ட கிராமத்தினரை அரிவாளைக்காட்டி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
முதுகுளத்தூா் காவல் நிலையத்தில் வழிவிட்டாள் அளித்த புகாரின் பேரில், போலீஸாா் முனியசாமியைக் கைது செய்தனா். காயமடைந்த வழிவிட்டாள் முதுகுளத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.