ராமநாதபுரத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கட்டுனா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கட்டுமானப் பொருள் விலை உயா்வால் தொழிலாளா்களுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தொடா்ந்து, தமிழ்நாடு கட்டுனா் சங்கம் ராமநாதபுரம் மாவட்டக் கிளை சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கேணிக்கரை காவல் நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டுநா் சங்க மாவட்டத் தலைவா் ரத்னவேல் தலைமை வகித்தாா். இருபதுக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், இரும்பு, சிமென்ட் விலைகளை குறைக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.