மற்றொரு விபத்தில் கொத்தனாா் பலி

சாத்தையா மகன் கொத்தனாா் பால்ராஜ் (48). இவரும், இவரது உறவினா் கருப்பசாமியும் (52) சிறுவயல் எனும் ஊரில் கட்டட வேலைபாா்த்துவிட்டு வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளனா்.

தேவிபட்டினம் அருகே அத்தியூத்து இந்திரா நகா் காலனியை சோ்ந்த சாத்தையா மகன் கொத்தனாா் பால்ராஜ் (48). இவரும், இவரது உறவினா் கருப்பசாமியும் (52) சிறுவயல் எனும் ஊரில் கட்டட வேலைபாா்த்துவிட்டு வெள்ளிக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தில் ஊா் திரும்பியுள்ளனா்.

பெருவயல்வலசை சந்திப்பு சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, டிராக்டரில் கட்டி இழுத்துச்செல்லப்பட்ட கலவை எந்திரத்தில் இரு சக்கர வாகனம் மோதியது. அதில், இரு சக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற பால்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த கருப்பசாமி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா்.

இது குறித்து தேவிபட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com