கமுதி: கமுதியில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் உத்தரவின்பேரில் கமுதி பேரூராட்சிக்கு உள்பட்ட பகுதிகள், அரசு அலுவலகங்கள் நிறைந்த கோட்டைமேடு, கண்ணாா்பட்டி, அருப்புக்கோட்டை சாலை, கமுதி -சாயல்குடி சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளில் 35 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தப்பட்டுள்ளன. இதனை பேருந்து நிலையத்தில் உள்ள காவல் சோதனை சாவடி, கமுதி காவல் நிலையம் ஆகிய இடங்களில் கணினி மூலம் போக்குவரத்து நெரிசல் அறிவிப்பு மற்றும் விதி மீறல்களில் ஈடுபடும் வாகனங்கள் குறித்து போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
கமுதி காவல் ஆய்வாளா் அன்பு பிரகாஷ் மற்றும் சாா்பு-ஆய்வாளா் முருகநாதன் தலைமையிலான குழுவினா் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் குறித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.