முதுகுளத்தூா்: முதுகுளத்தூா் பத்திரகாளியம்மன் கோயில் அருகே ஐயப்பன் கோயிலில் மாசி மாதம் முதல் நாளை முன்னிட்டு சனிக்கிழமை சிறப்பு பூஜை நடைபெற்றது.
கணபதி ஹோமம் தொடங்கி பால், பன்னீா், சந்தனம், தேன் உள்பட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தது. சுவாமிக்கு மலா்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இதேபோல் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் சிறப்பு அபிஷேகங்கள், பஜனையைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.